அறுபதாண்டுகளுக்கு முன் ஒரு புத்தாண்டு பருவகாலம் | காலக்கண்ணாடி 05

Published on Author தண்பொழிலன்

நூலக நண்பர்கள் அனைவருக்கும் இனிய 2019 ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!   இம்முறை காலக்கண்ணாடியில் நாம் பார்க்க இருப்பது, ஈழநாடு பத்திரிகை. யாழ்ப்பாணத்தை மையமாக வைத்து வெளியான பழம்பெரும் தினசரிகளில் ஒன்று. 1960 புத்தாண்டை அண்டி வெளியான அவ்விதழின் 1959 டிசம்பர் 26 இதழைத் தான் நாம் இன்று பார்க்கப் போகிறோம். “இடதுசாரிப் பிளவுகள்: டட்லி அதிர்ஷ்டம்” என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் பத்திரிகையின் தலைப்புச் செய்தியில், கொழும்பு மாநகரசபைத் தேர்தலில் இடதுசாரிக் கட்சிகளைத் தோற்கடித்து யு.என்.பி வென்ற பின்னணி… Continue reading அறுபதாண்டுகளுக்கு முன் ஒரு புத்தாண்டு பருவகாலம் | காலக்கண்ணாடி 05

நூலகத்தின் ஊர் ஆவணப்படுத்தல் திட்டம்

Published on Author தண்பொழிலன்

வரலாறு என்றால், நாமெல்லாம் சேரநாடு, சோழநாடு, பாண்டியநாடு, என்று பட்டியல் வாசிப்போம். இதே கேள்வியை தொன்மையான வரலாற்றுக் குடியிருப்புகள் என்றால், மதுரை, தஞ்சை, காஞ்சி என்றோ, கீழடி, ஆதிச்சநல்லூர் என்றோ மீண்டும் தமிழகத்திலேயே போய் நிற்போம்.   கொஞ்சம் விடயம் தெரிந்தவர் என்றால் யாழ்ப்பாண இராச்சியம், வன்னிச் சிற்றரசுகள், மட்டக்களப்பு வன்னிமைகள் திருக்கோணமலை, கந்தரோடை, பொம்பரிப்பு, என்று இங்குள்ள பட்டியலையும் சேர்த்துக்கொள்ளுவோம். . இதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். நீங்கள் பிறந்த ஊரின் வரலாறு உங்களுக்குத் தெரியுமா? தமிழரின் வரலாற்றுக் குடியிருப்புகளில் உங்கள் ஊரின் பெயரையும்… Continue reading நூலகத்தின் ஊர் ஆவணப்படுத்தல் திட்டம்

இரண்டாம் உலகப்போருக்கு முன் இலங்கையில் ஒருநாள் – காலக்கண்ணாடி 02

Published on Author தண்பொழிலன்

  உலகின் வல்லரசுகள் பல ஒன்றோடொன்று மோதிக்கொண்டிருந்த இரண்டாம் உலகப்போர் 1939 முதல் 1945 வரை இடம்பெற்றது உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கும். அதற்கும் முன் இலங்கையில் வெளியான ஒரு பத்திரிகையின் செய்தியொன்றை இவ்வாரம் நாம் பார்க்கலாம்.   இந்தப் பத்திரிகை வெளியான ஆண்டு 1935. வெளியிட்ட பத்திரிகையின் பெயர், ஈழகேசரி ஈழகேசரி, 1930களிலிருந்து சுமார் இருபத்தைந்து ஆண்டுகளாக யாழ்ப்பாணத்திலிருந்து வெளியான ஒரு பத்திரிகை. அதை நிறுவியவர் குறிப்பிடத்தக்க ஈழத்து ஆளுமைகளுள் ஒருவரான நா.பொன்னையா அவர்கள்.அதன் 1935.07.21 திகதியிட்ட பத்திரிகையில் “இலங்கையில் யுத்தவீரர்… Continue reading இரண்டாம் உலகப்போருக்கு முன் இலங்கையில் ஒருநாள் – காலக்கண்ணாடி 02

“யாழ்ப்பாண இராச்சியம்” – பேராசிரியர்.சி.க.சிற்றம்பலம்

Published on Author தண்பொழிலன்

“யாழ்ப்பாண இராச்சியம்” எனும் நூலானது, இலங்கைத் தமிழரின் வரலாற்றைப் பொறுத்தவரை, மிக முக்கியமானதாகும். பேராசிரியர்.சி.க.சிற்றம்பலம் அவர்களின் தொகுப்பில், 1992 இல் யாழ்.பல்கலைக்கழக வெளியீடாக வெளிவந்த இந்நூல், வட இலங்கையில் நிலவிய தமிழரசு பற்றிய அதிகபட்ச சான்றாதாரங்களுடன் எழுதப்பட்ட அருமையான நூல் ஆகும். இந்நூலானது, அதிகபட்ச வரலாற்றுணர்வோடு இலங்கையில் எழுதப்பட்ட தமிழ்நூல்களில் ஒன்று எனலாம். யாழ் தீபகற்பத்தின் வரலாற்றைப் பாடுகின்ற, கைலாயமாலை, வையாபாடல், யாழ்ப்பாண வைபவ மாலை ஆகிய தொன்மங்களை அப்படியே எடுத்தாளாமல், அவற்றில் “கதை” எனத் தள்ளத்தக்கவற்றைத்… Continue reading “யாழ்ப்பாண இராச்சியம்” – பேராசிரியர்.சி.க.சிற்றம்பலம்

ஐந்து புத்தக சவால் – இலங்கை வரலாறு!

Published on Author தண்பொழிலன்

முகநூலில் அண்மையில் பிரபலமாக இருந்த ஐந்து புத்தகங்கள் சவால் (Five books challenge) பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். பொதுவாக இந்த சவாலில் தங்களுக்குப் பிடித்த ஐந்து புத்தகங்களின் அட்டைகளைப் பதிவிட்டு, இன்னும் ஐந்து பேரை இணைத்துக்கொள்வார்கள். அவ்வாறு இணைக்கப்பட்ட ஒவ்வொருவரும் தங்களுக்குப் பிடித்த ஐந்து புத்தகங்களின் அட்டைகளைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். பிரபலமான அல்லது பலருக்கும் பிடித்தமான புத்தகங்களின் அட்டைகளே இந்த சவாலில் பெரும்பாலும் பகிர்ந்துகொள்ளப்பட்டன. எனினும், முகநூல் பதிவர்கள், பத்தோடு பதினொன்றாகக் கருதி அந்தப் பதிவுக்கு விருப்பம்… Continue reading ஐந்து புத்தக சவால் – இலங்கை வரலாறு!

Library – Archive – Museum: தோற்றமும் பின்னணியும் பற்றிய வளங்கள்

Published on Author Natkeeran L. Kanthan

கல்வித் துறைகள், ஆய்வு முறைமைகள், சமூக நிறுவனங்கள் என்பன ஆக்கபூர்வமான விமர்சன நோக்கில் அணுகப்பட வேண்டியது அவசியம்.  நூலகங்கள் (Libraries), ஆவணகங்கள் (Archives), அருங்காட்சியகங்கள்  (Museums) ஆகிய மூன்றும் இவ்வாறே கூர்மையாக நோக்கப்படவேண்டும்.  பெரும்பாலும் இத்தகைய நினைவக நிறுவனங்கள் சமூகத்தின் அதிகார மையங்களோடு தொடர்புடையவையாகவே அமைகின்றன. இவற்றில்  எது ஆவணப்படுத்தப்படுகிறது, யார் ஆவணப்படுத்துகிறார்கள், எப்படி ஆவணப்படுத்துகிறது, யாருக்கு அணுக்கம் உள்ளது உட்பட்ட கேள்விகள் முக்கியமானவையாக அமைகின்றன. இன்றைய நவீன நூலகம் – ஆவணகம் – அருங்காட்சியக துறை நிறுவனங்களின்… Continue reading Library – Archive – Museum: தோற்றமும் பின்னணியும் பற்றிய வளங்கள்

காலக்கண்ணாடி 01: காலங்கள் மாறும் காட்சிகள் மாறாது

Published on Author தண்பொழிலன்

“சிங்களத்தையும் தமிழையும் இந்த நாட்டின் உத்தியோக பாஷைகளாக்க இலங்கை அரசியல் சட்டத்தை மாற்றுவோம் என்று இலங்கைப் பிரதமர் சமீபத்தில் யாழ்ப்பாணத்தில் கூறியதை எதிர்த்து வெகுசீக்கிரத்தில் அரசாங்க பாராளுமன்ற கட்சிக் கூட்டத்தில் பிரச்சினை எழுப்பப்படும்” இந்தச் செய்தியைப் படித்து நீங்கள் ஒன்றும் குழப்பமடையத் தேவையில்லை. இது சமகாலச் செய்தி அல்ல.செய்தியில் கூறப்படும் பிரதமர் சேர். ஜோன் கொத்தலாவல. இலங்கையின் மூன்றாவது பிரதமர். ஆம். சரியாக அறுபத்து மூன்று ஆண்டுகளுக்கு முன் இலங்கையின் பழம்பெரும் பத்திரிகைகளில் ஒன்றான சுதந்திரனின், 1954… Continue reading காலக்கண்ணாடி 01: காலங்கள் மாறும் காட்சிகள் மாறாது