நூலக நலன்விரும்பிகளின் நூலக வருகை – 25.03.2024

Published on Author Loashini ThiruchendooranLeave a comment

25 மார்ச் 2024, திங்கட்கிழமை யாழ் சுண்டிக்குளியில் அமைந்துள்ள நூலக நிறுவன அலுவலகத்தைப் பார்வையிடுவதற்கு லண்டனில் இருந்து வயிரவநாதன் சிவரதன், அச்சுதன் சிவகுமார் மற்றும் இ. தமிழரசன், ராஜி தமிழரசன் குடும்பத்தினரும், இலங்கை யாழ்ப்பாணத்திலிருந்து ஞானேந்திரராஜா கஜேந்திரன் ஆகியோரும் வருகை தந்திருந்தனர். இவர்களுள் வயிரவநாதன் சிவரதன் என்பவர் 2014ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரையில் நூலக நிறுவனத்திற்கு நீண்ட காலமாக நிதிப்பங்களிப்புச் செய்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அச்சுதன் சிவகுமார் என்பவர் 2007ஆம் ஆண்டிலிருந்து நூலகத்தின் செயற்பாடுகளில் தன்னார்வலராக… Continue reading நூலக நலன்விரும்பிகளின் நூலக வருகை – 25.03.2024

நூலக நலன்விரும்பிகளின் நூலக வருகை – 20.03.2024

Published on Author Loashini ThiruchendooranLeave a comment

20 மார்ச் 2024, புதன்கிழமை யாழ் சுண்டிக்குளியில் அமைந்துள்ள நூலக நிறுவன அலுவலகத்தைப் பார்வையிடுவதற்கு சுவிட்சர்லாந்தில் இருந்து லாவண்யா இலக்சுமணன் அவர்கள் வருகை தந்திருந்தார்.           இவர் நிறுவனம் சார்ந்த செயற்பாடுகளை நேரடியாகப் பார்வையிட்டதுடன், நிறுவனம் எவ்வாறு செயற்படுகிறது, நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற செயற்றிட்டங்கள் மற்றும் அவை சார் அடைவுகள், நிறுவனத்தினது எதிர்காலத் திட்டங்கள் என்பன தொடர்பில் கலந்துரையாடினார். அத்துடன் நிறுவனத்தில் ஆவணப்படுத்தப்பட்டுப் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் பழமையான ஆவணங்களையும் பார்வையிட்டார். மேலும் நூலக… Continue reading நூலக நலன்விரும்பிகளின் நூலக வருகை – 20.03.2024

நூலக நலன்விரும்பிகளின் நூலக வருகை – 19.03.2024

Published on Author Loashini ThiruchendooranLeave a comment

19 மார்ச் 2024, செவ்வாய்க்கிழமை அன்று யாழ் சுண்டிக்குளியில் அமைந்துள்ள நூலக நிறுவன அலுவலகத்தைப் பார்வையிடுவதற்குக் கனடாவிலிருந்து இ. இளஞ்செழியன் அவர்கள் வருகை தந்திருந்தார்.        இவர் நூலக நிறுவனம் சார்ந்த செயற்பாடுகளை நேரடியாகப் பார்வையிட்டதுடன், நிறுவனத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் பழமையான ஆவணங்கள் தொடர்பிலும் கலந்துரையாடினார். மேலும் நிறுவனத்தின் செயற்பாட்டுசார் வளர்ச்சியில் தானும் பங்களிப்பதாயும் குறிப்பிட்டு இருந்தார். இவருடனான சந்திப்பில் நூலக நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அலுவலகர் திருமதி. றஞ்சுதமலர் நந்தகுமார் அவர்களும், எண்ணிமமாக்கமும்… Continue reading நூலக நலன்விரும்பிகளின் நூலக வருகை – 19.03.2024

நூலக நலன்விரும்பிகளின் நூலக வருகை – 04.03.2024

Published on Author Loashini ThiruchendooranLeave a comment

நூலக நிறுவனத்தின் யாழ் அலுவலகத்தைப் பார்வையிடுவதற்கு, கனடாவில் இறக்குமதி மற்றும் விநியோகம் (Import & Distribution) சார்ந்த வர்த்தகத் தொழிலில் ஈடுபட்டு வருகின்ற பி.கஜேந்திரன் அவர்கள் 04.03.2024 திங்கட்கிழமை அன்று வருகை தந்திருந்தார்.  இவர் நூலக நிறுவனம் சார்ந்த செயற்பாடுகள், நூலக நிறுவனத்தின் பெளதீக ஆவணங்கள் (Physical Repository), நூலக நிறுவனத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் பழமையான பத்திரிகைகள், நூல்கள் போன்றவற்றையும் பார்வையிட்டதுடன், நூலக செயற்பாடுகளின் போக்கு தொடர்பிலும் கலந்துரையாடினார்.     இவருடனான சந்திப்பில், நூலக நிறுவனத்தின்… Continue reading நூலக நலன்விரும்பிகளின் நூலக வருகை – 04.03.2024

நூலக நலன்விரும்பிகளின் நூலக வருகை

Published on Author Loashini Thiruchendooran

வட அமெரிக்க தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் Yarl IT Hub மற்றும் யாழ்பல்கலைக்கழகமும் இணைந்து நடாத்திய FiTEN Yarl 2024 மாநாடு நிகழ்வில் கலந்துகொள்வதற்காக, இலங்கைக்கு வந்திருந்த வட அமெரிக்க தமிழ்ச் சங்க கூட்டமைப்பு (Federation of Tamil Sangams of North America – FeTNA) உறுப்பினர்கள் மற்றும் நூலக நிறுவனத்தின் ஆளுகைச் சபை உறுப்பினரான திரு. சசீவன் கணேசானந்தன் அவர்களும் 19 ஜனவரி 2024, வெள்ளிக்கிழமை அன்று யாழ் சுண்டுக்குளியில் அமைந்துள்ள நூலக… Continue reading நூலக நலன்விரும்பிகளின் நூலக வருகை

நூலக நலன்விரும்பிகளின் நூலக வருகை

Published on Author Loashini Thiruchendooran

யாழ்ப்பாண பொது நூலகத்துடன் இணைந்து செய்கின்ற நூலக நிறுவனத்தின் எண்ணிமப்படுத்தல் செயற்றிட்டத்திற்கு அனுசரணை வழங்கும் மனித நேயம் அமைப்பின் உறுப்பினரான திரு. மித்திரன் அவர்களும், அவரது உதவியாளரும், நூலக நிறுவனத்தின் ஆளுகை சபை உறுப்பினரான திரு. சசீவன் கணேசானந்தன் அவர்களும் 18 ஜனவரி 2024, வியாழக்கிழமை அன்று யாழ் சுண்டுக்குளியில் அமைந்துள்ள நூலக நிறுவனத்திற்கு வருகை தந்திருந்தனர்.  இவர்கள் நூலக நிறுவனத்தின் எண்ணிமப்படுத்தல் சார்ந்த செயற்பாடுகளை நேரடியாகப் பார்வையிடுவதற்கும் மனித நேயம் அமைப்பின் இரண்டாவது ஆண்டு நிறைவு… Continue reading நூலக நலன்விரும்பிகளின் நூலக வருகை

நூலக நலன்விரும்பிகளின் நூலக வருகை

Published on Author Loashini Thiruchendooran

நூலக நிறுவனத்தின் நலன்விரும்பிகளுள் ஒருவரான பேராசிரியர் பி.ஏ. ஹுசைன்மியா அவர்கள், 15.12.2023 வெள்ளிக்கிழமை நூலக நிறுவனத்தின் யாழ் அலுவலகத்திற்கு வருகை தந்திருந்தார்.               அவர் நூலக நிறுவனம் சார்ந்த செயற்பாடுகளை நேரடியாகப் பார்வையிட்டதுடன், நூலகச் செயற்பாடுகளின் போக்கு தொடர்பிலும் கலந்துரையாடினார். மேலும் 2021 ஆம் ஆண்டிலிருந்து நூலகத்தின் செயற்பாடுகளில் தன்னார்வலராகச் செயற்பட்டுவரும் அவர், நூலகத்தின் “முஸ்லிம் ஆவணகம்” செயற்றிட்டத்திலும் பங்களிப்பு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  மலாய் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் அர்ப்பணிப்புடன்… Continue reading நூலக நலன்விரும்பிகளின் நூலக வருகை