நூலக நிறுவனத்தின் தைப்பொங்கல் நிகழ்வும் 20ஆவது ஆண்டு ஆரம்பச் சந்திப்பும்

Published on Author Loashini Thiruchendooran

இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்களின் எழுத்தாவணங்களை எண்ணிமப்படுத்தி ஆவணப்படுத்தும் செயற்பாடுகளை ஊக்குவிக்கவும், தகவல் வளங்களை ஒழுங்குபடுத்தி அனைவருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டுமென்ற நோக்கத்தோடும், 15 ஜனவரி, 2005 அன்று ஆரம்பிக்கப்பட்ட நூலக நிறுவனமானது, 147,353 ஆவணங்களுடனும், 5,357,037 பக்கங்களுடனும் தனது 20ஆவது அகவையில் காலடி எடுத்து வைத்திருக்கின்றது.   உலகவாழ் தமிழர்களின் பாரம்பரிய அறுவடைத் திருவிழாவான ‘தைப்பொங்கல்’, ‘நூலக நிறுவனத்தின் 20ஆவது ஆண்டு ஆரம்பம்’ ஆகிய இரு நிகழ்வுகளும், யாழ்ப்பாணம் சுண்டுக்குளி சோமசுந்தரம் ஒழுங்கையில் அமைந்துள்ள நூலக நிறுவனத்… Continue reading நூலக நிறுவனத்தின் தைப்பொங்கல் நிகழ்வும் 20ஆவது ஆண்டு ஆரம்பச் சந்திப்பும்

நூலக நிறுவனத்தின் வருட இறுதி பணியாளர் ஒன்றுகூடல் 2023

Published on Author Loashini Thiruchendooran

நூலக நிறுவனத்தின் வருட இறுதி பணியாளர் ஒன்றுகூடலானது 20.12.2023 அன்று காலை 9.30 மணிக்கு யாழ்ப்பாணம் நூலக அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் யாழ் அலுவலகப் பணியாளர்கள் நேரடியாக கலந்து கொண்டதுடன், மட்டக்களப்பு அலுவலகப் பணியாளர்கள் Zoom ஊடாக இணையவழியில் இணைந்து கொண்டனர்.     இவ் ஒன்றுகூடலில் 5S சார்ந்த ஒழுங்கமைப்பு, 2024 ஆம் ஆண்டுக்கான செயற்பாடுகள் பற்றிய தெளிவூட்டல், நூலகத்திற்கான புதிய நலன்புரி அமைப்புக்கான உறுப்பினர் தெரிவு என்பன இடம்பெற்றன. அதன் பின்னர் நாட்டின் காலநிலை சீரின்மை… Continue reading நூலக நிறுவனத்தின் வருட இறுதி பணியாளர் ஒன்றுகூடல் 2023

நூலக நிறுவனத்தின் வருடாந்த பணியாளர் ஒன்றுகூடல் 2023

Published on Author Loashini Thiruchendooran

நூலக நிறுவனத்தின் வருடாந்த பணியாளர் ஒன்றுகூடலானது 29.06.2023 – 01.07.2023 வரையிலான காலப்பகுதியில் மூன்று நாட்கள் பயணமாக மட்டக்களப்பில் இடம்பெற்றது. இப்பயணத்தில் நூலக நிறுவனப் பணியாளர்கள் கலந்துகொண்டிருந்ததுடன் அவர்களிடையே வேடிக்கையான விளையாட்டுக்களும் நடாத்தப்பட்டன. இப்பயணத்தின் முதல் நாள், # குசலான மலையும் குசலான குமரன் ஆலயமும் # புல்லுமலை இரண்டாம் நாள், # ஸ்ரீ மாமாங்க பிள்ளையார் கோவில் # காத்தான்குடி கடற்கரை # கல்லடி கடற்கரை # கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரம் ஆலயம் # மட்டக்களப்பு நூலக… Continue reading நூலக நிறுவனத்தின் வருடாந்த பணியாளர் ஒன்றுகூடல் 2023

நூலக நிறுவனத்தின் புகைப்பட ஆவணமாக்கல் : பயிற்சிப்பட்டறை

Published on Author Loashini Thiruchendooran

நூலக நிறுவனத்தின் ஆவணப்படுத்தல் செயன்முறைக்கு வலுச்சேர்க்கும் வகையில் தன்னார்வலர்களுக்கான புகைப்பட ஆவணமாக்கல் பயிற்சிப்பட்டறை ஏப்ரல் 02 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 9.30 மணி முதல் 12.00 மணி வரை யாழ்ப்பாணம், சுண்டுக்குளி சோமசுந்தரம் ஒழுங்கையில் அமைந்துள்ள நூலக நிறுவனத்தில் இடம்பெற்றது. சுரேன் போடோகிராஃப்பியின் நிறுவனரும் தகவல் தொழிநுட்பம் மற்றும் ஊடகக் கற்கைகள் விரிவுரையாளரான சுரேந்திரகுமார் கனகலிங்கம் அவர்கள் வளவாளராக செயற்பட்டு புகைப்படம் ஆவணமாக்கல் சம்பந்தமான பல கருத்துக்களை வழங்கியிருந்தார். ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வி அதிகாரிகள், ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள், புகைப்படக்கலைஞர்கள், ஆவணப்படுத்துனர்கள், கணினித்துறை நிபுணர்கள்… Continue reading நூலக நிறுவனத்தின் புகைப்பட ஆவணமாக்கல் : பயிற்சிப்பட்டறை

புகைப்பட ஆவணமாக்கல் : பயிற்சிப் பட்டறை (Photography Documentation : WORKSHOP)

Published on Author Loashini Thiruchendooran

நூலக நிறுவனத்தின் ஆவணப்படுத்தல் செயன்முறைக்கு வலுச்சேர்க்கும் வகையில் தன்னார்வலர்களுக்கான புகைப்பட ஆவணமாக்கல் பயிற்சிப்பட்டறை நூலக நிறுவனத்தால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் 02 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 9.30 மணிமுதல் 11.30 மணிவரை யாழ்ப்பாணம், சுண்டுக்குளி சோமசுந்தரம் ஒழுங்கையில் அமைந்துள்ள நூலக நிறுவனத்தில் இடம்பெறும். இப்பயிற்சிப்பட்டறையில் சுரேன் போடோகிராஃப்பியின் நிறுவனரும் தகவல் தொழிநுட்பம் மற்றும் ஊடகக் கற்கைகள் விரிவுரையாளருமான சுரேந்திரகுமார் கனகலிங்கம் அவர்கள் வளவாளராக கலந்துகொள்வார். ஆர்வமுள்ளவர்கள் கீழுள்ள கூகுள் படிவத்தை பூரணப்படுத்தவும் https://forms.gle/C1oYpJqas4xZ7F8u5     … Continue reading புகைப்பட ஆவணமாக்கல் : பயிற்சிப் பட்டறை (Photography Documentation : WORKSHOP)

நூலக நிறுவனத்தின் பொங்கல் நிகழ்வும் 19ஆவது ஆண்டு ஆரம்ப சந்திப்பும்

Published on Author Loashini Thiruchendooran

பத்தொன்பது ஆண்டுகளுக்கு முன்பு, ஜனவரி 15, 2005 அன்று ஆரம்பிக்கப்பட்டு இவ்வாண்டு 130,545 ஆவணங்களுடனும் 4,631,372 பக்கங்களுடனும் தனது 19ஆவது அகவையில் காலடி எடுத்து வைத்திருக்கிற நூலக நிறுவனம், பாரம்பரிய அறுவடைத் திருவிழாவான ‘தைப் பொங்கல்’ மற்றும் நூலக நிறுவனத்தின் 19ஆவது ஆண்டு ஆரம்ப விழா என்பவற்றை சுண்டுகுளி சோமசுந்தரம் ஒழுங்கையில் அமைந்துள்ள நூலக அலுவலகத்தில் 15 ஜனவரி 2023 ஞாயிற்றுக்கிழமை அன்று உற்சாகத்துடன் கொண்டாடியது. நூலக நிறுவனப் பணியாளர்கள் மற்றும் நூலகத் தன்னார்வலர்கள் ஆகியோர் இப்பொங்கல்… Continue reading நூலக நிறுவனத்தின் பொங்கல் நிகழ்வும் 19ஆவது ஆண்டு ஆரம்ப சந்திப்பும்

நூலக நிறுவனத்தின் வருடாந்த பணியாளர் ஒன்றுகூடல் – 2022

Published on Author Loashini Thiruchendooran

நூலக நிறுவனத்தின் வருடாந்த பணியாளர் ஒன்றுகூடலானது 25.11.2022 – 26.11.2022 வரையிலான காலப்பகுதியில் இரண்டு நாட்கள் பயணமாகத் திருகோணமலையில் இடம்பெற்றது. இப்பயணத்தில் நூலக நிறுவனப் பணியாளர்கள் கலந்துகொண்டிருந்ததுடன் அவர்களிடையே வேடிக்கையான விளையாட்டுக்களும் நடாத்தப்பட்டன. இப்பயணத்தின் முதல் நாள், # திருகோணமலை ஸ்ரீ லக்‌ஷ்மி நாராயனப் பெருமாள் கோவில் # ஸ்ரீ திருக்கோணேஸ்வரம் கோவில் # சீனக்குடா துறைமுகம் # நிலாவெளி கடற்கரை போன்ற இடங்களும் இரண்டாம் நாள், # திருகோணமலை மாபல் கடற்கரை # கண்ணியா வெந்நீரூற்று என்பனவும் பார்வையிடப்பட்டன.  … Continue reading நூலக நிறுவனத்தின் வருடாந்த பணியாளர் ஒன்றுகூடல் – 2022