யாழில் சுவடி ஆவணப்படுத்தல் கண்காட்சி

Published on Author தண்பொழிலன்

வட இலங்கையின் சுவடிச்சேகரங்களை எண்ணிமப்படுத்தும் செயற்றிட்டமானது, இங்கிலாந்தின் ஆபத்துக்குள்ளான சுவடிக்காப்பகத் திட்டத்தின் அனுசரணையில் இடம்பெற்றுவருகின்றது. இதன் ஒரு பாகமாக, சுவடிகளை ஆவணப்படுத்துவது எவ்வாறு என்பதை விவரிக்கும் கண்காட்சி ஒன்று நூலக நிறுவனத்தால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் அக்டோபர் 12 (வெள்ளி) முதல் 14 (ஞாயிறு) வரை இது கொக்குவில் ஆடிய பாதம் வீதியிலுள்ள நூலக நிறுவனத்தில் இடம்பெறும்.     ஆய்வு, ஆவணப்படுத்தல், மரபுரிமை தொடர்பான ஆர்வமுள்ள அனைவரதும் வருகையினை நூலக நிறுவனம் எதிர்பார்க்கிறது

2017இல் நூலக நிறுவனம்: ஒரு மீள் பார்வை

Published on Author தண்பொழிலன்

நூலக நிறுவனமானது, வெற்றிகரமாக தனது 14 ஆவது ஆண்டுக்குள் காலடியெடுத்து வைக்கும் இவ்வேளையில், கடந்த 2017இல் சிறப்பாகச் செய்துமுடித்த முக்கியமான மைல்கற்களையும், அடுத்த ஆண்டுக்காகவும் தொடரும் நடவடிக்கைகளையும் கவனப்படுத்த விரும்புகின்றது. நூலகத்தின் 2017ஆம் ஆண்டில் செய்து முடிக்கப்பட்ட முதன்மை அடைவுகளாக பின்வருவனவற்றைப் பட்டியல் படுத்தலாம். 50,000 எழுத்தாவணங்கள் இலக்கைத் தாண்டியது – எண்ணிம நூலகம் ஆவணகத் தளம் வெளியீடும் சுமார் 2,500 பல்லூடகங்களின் சேமிப்பும் 70 இற்கும் மேற்பட்ட வாய்மொழி வரலாறுகள் ஈழத்து நூற்பட்டியலை எண்ணிமப்படுத்தல் – 11,500 நூல் விபரங்கள் மலையகம், திருகோணமலை,… Continue reading 2017இல் நூலக நிறுவனம்: ஒரு மீள் பார்வை

ஓலைச்சுவடி அறிமுகமும் பாதுகாப்பும்

Published on Author Noolaham Foundation

     முனைவர் ஜெ. முத்துச்செல்வன்  உலகில் மனித இனம் தோன்றி அவற்றின் படிப்படியான வளர்ச்சியின் காரணமாக மொழிகள் உருவாகின.  அம்மொழியானது தொடக்க நிலையில் ஒலிக்குறிப்புகளையும், அதற்கு அடுத்த நிலையில் பேச்சுமொழியையும், வளர்ந்த நிலையில்  இலக்கியங்களையும், வளர்ச்சியின் உச்சநிலையில் இலக்கணங்களையும் உருவாக்கி, தன் நிலையின் வளர்ச்சிப் படிநிலைகளைப் பதிவு செய்கின்றது.  இவ்வாறு உலகில் தோன்றிய பழமையான மொழிகளுள் ஒன்று தமிழ்மொழி.  இம்மொழியின் தோற்றம்,  ஆதிவடிவம் போன்றவற்றை அறியமுடியவில்லை.  ஆனால் கி.மு. 2ஆம் நூற்றாண்டிலிருந்த தமிழ் எழுத்துகளின் வடிவம் காலத்திற்குக்… Continue reading ஓலைச்சுவடி அறிமுகமும் பாதுகாப்பும்