நூலகத்தில் தினப்புயல் வாரப் பத்திரிகை

Published on Author Noolaham Foundation

“தினப்புயல்” வாரப்பத்திரிகை; வன்னிமண்ணிலிருந்து 2012ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் 5ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு, கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கின்றது.  இப்பத்திரிகைகளின் ஆரம்ப வெளியீடுகள் முதல் அனைத்து வெளியீடுகளையும் நூலக நிறுவன எண்ணிம நூலகத்தினூடாக இனிவரும் காலங்களில் தொடர்ச்சியாக ஆவணப்படுத்தி வெளியிடுவதற்கான அனுமதியினை “தினப்புயல்” இயக்குணரும், முன்னணி ஊடகவியலாளரும், இரணியன் எனும் புனைபெயரில் ஊடகங்களில் எழுதிவரும் சக்திவேல் பிள்ளை பிரகாஷ் அவர்கள் நூலக நிறுவன தொடர்பாடல் மற்றும் சமூகத்தொடர்பு அலுவலகரிடம், வவுனியாவில் தேக்கவத்தையில் அமைந்துள்ள “தினப்புயல்”… Continue reading நூலகத்தில் தினப்புயல் வாரப் பத்திரிகை

சாந்திகம் அலுவலகர்களுடன் சந்திப்பு

Published on Author Noolaham Foundation

உளநல ஆலோசனைகள், பயிற்சிகள், உளவள கற்கை நெறிகள் தொடர்பில் பல உளவள வைத்திய நிபூணர்கள் மற்றும் ஆலோசகர்களின் பங்களிப்புடன் யாழ்ப்பாணத்தில் இருந்து நீண்டகாலமாக சேவையாற்றிவரும் சாந்திகம் நிலையத்தில் (Shanthiham-Association for health and Counselling) அந் நிறுவன இயக்குணர் ஜே.தற்பனன் மற்றும் நிறுவன அலுவலர்கள், மூத்த உளவள வைத்திய நிபூணர் வைத்திய கலாநிதி.தயா சோமசுந்தரம் முதலியோருடன் 05/12/2015 அன்று நூலக நிறுவன தொடர்பாடல் அலுவலகர் நூலக நிறுவன செயற்பாடுகள் தொடர்பில் ஓர் சிறு கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தார். இதன்… Continue reading சாந்திகம் அலுவலகர்களுடன் சந்திப்பு

நூலகத்தில் மொழிதல் ஆய்விதழ்

Published on Author Noolaham Foundation

மட்டக்களப்பில் இருந்து ஓர் ஆய்விதழாக வெளிவரும் ‘மொழிதல்’ இதழ்களினை இப்போது நூலகம் நிறுவன எண்ணிம நூலகத்தில் பார்வையிடமுடியும். இவ் ஆய்விதழ் அரையாண்டிதழாக 2014ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் வெளிவர ஆரம்பித்தது. கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர்களான சி.சந்திரசேகரம், வ.இன்பமோகன், சு.சிவரத்தினம் முதலியோர் இவ் இதழ்களினது ஆசிரியர்களாக உள்ளனர். மேலும் பல முன்னாள் பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்களும் இவ் இதழின் ஆலோசகர்வட்டத்தில் பங்கெடுக்கின்றனர். பல்வேறு புலமையாளர்களின் கட்டுரைகளை உள்ளடக்கங்களாகக் கொண்டு இவ் ஆய்விதழ் வெளியாகின்றது. இதனை நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில்… Continue reading நூலகத்தில் மொழிதல் ஆய்விதழ்

நூலகத்தில் கெளரீஸ்வரனின் வெளியீடுகள்

Published on Author Noolaham Foundation

மட்டக்களப்பின் இளம் சமூக செயற்பாட்டாளரும், சமூக அரங்கான கூத்தரங்கின் ஆய்வாளரும், மூன்றாவது கண் உள்ளூர் அறிவுத்திறன் செயற்பாட்டுக்குழுவின் மூத்த உறுப்பினரும், எழுத்தாளருமான ஆசிரியர் திரு. துரை. கெளரீஸ்வரன் அவர்களுடைய எழுத்துக்களை தற்போது நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில் அணுகி வாசிக்கலாம். இதற்கான அனுமதியினை ஆசிரியர் திரு.துரை.கெளரீஸ்வரன் அவர்கள் நூலக நிறுவனத்திடம் கையளித்தார். இணைப்பில் நூல்கள்- http://tinyurl.com/och87xy {{உலகளாவிய ரீதியில் இலங்கைத்தமிழ் பேசும் சமூகம் தொடர்பான ஆவணப்படுத்தலுக்கும் அவற்றை திறந்த அணுக்கத்தில் அனைவருக்கும் பகிர்வதற்கும் உங்களது உறவினர்களுடைய நினைவுமலர்களையும்… Continue reading நூலகத்தில் கெளரீஸ்வரனின் வெளியீடுகள்

நூலகத்தில் மட்டக்களப்பு இசைநாடகப் பள்ளியின் வெளியீடுகள்

Published on Author Noolaham Foundation

இசைநாடகப்பள்ளி; மட்டக்களப்பின் குருக்கள் மடத்தில் இருந்து கீதா கெளரிபாலன் என்பவரால் கடந்த இருஆண்டுகளுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டு இசை மற்றும் நாடகம் முதலியவற்றினை தொடர்ச்சியாக பேணும் நோக்குடனும் புதியதோர் தலைமுறையினை இதன்பால் வளர்த்தெடுக்கும் நோக்குடனும் தொடர்ந்து இயங்கிவருகின்றது. இவ் இசைநாடகப் பள்ளியின் வெளியீடாக ‘வியளம்’ எனும் சஞ்சிகை சிறுவர்கள், இளையோர்கள் போன்றோரின் ஆற்றலுக்கு களமமைக்கும் விதமாக அண்மைக்காலமாக வெளியிடப்படுகின்றது. இச் சஞ்சிகைகள் நூலக நிறுவனத்தில் தொடர்ச்சியாக ஆவணப்படுத்தப்படுகின்றன. இவற்றின் பிரதிகள் மற்றும் அனுமதிகள் போன்றவற்றினை ‘இசைநாடகப் பள்ளியின்’ நிறுவனரும்,… Continue reading நூலகத்தில் மட்டக்களப்பு இசைநாடகப் பள்ளியின் வெளியீடுகள்