நூலக நிறுவனத்தின் அறிவுப் பகிர்தல் பாதையின் தொடர்ச்சி

Published on Author Noolaham Foundation

யாழ்/ தென்மராட்சி கல்வி வலயத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட தென்மராட்சி கல்வி வலய பாடசாலை நூலகர்களுக்கான செயலமர்வு 04/07/2015 அன்று காலை 8.00மணி முதல் மாலை 4.30 மணி வரை சாவகச்சேரி மகளிர் கல்லூரியில் இடம் பெற்றது. அந்நிகழ்வில் வளவாளர்களாக நூலக நிறுவன அலுவலர்கள் அழைக்கப்பட்டிருந்ததுடன் நூலக தன்னியக்கமாக்கல் மற்றும் எண்ணிம நூலகம் தொடர்பில் பூரண விளக்கத்தினை அளித்திருந்தனர். இதில் 30க்கும் மேற்பட்ட தென்மராட்சி கல்வி வலய ஆசிரியர்கள் பங்குபற்றி பயன்பெற்றதுடன் நூலக நிறுவனத்தினரின் செயற்றிட்டங்கள் தொடர்பில் தமது ஆதரவினை வெளிப்படுத்தி இருந்தனர்.
452px-2015.07.04-02
தென்மராட்சி கல்வி வலய நூலக இணைப்பாளர் திருமதி.சிவநங்கை உருத்திரமூர்த்தி அவர்கள் இந் நிகழ்வினை ஒருங்கிணைத்திருந்தார். நூலகம் சார்பில் இயக்குணர் திரு. சேரன் சிவானந்தமூர்த்தி உட்பட இதர அலுவலர்களும் இந்நிகழ்வில் பங்குபெற்றி இருந்தனர்.
452px-2015.07.04-05
மேலும் நூலகத்தின் இதுவரையான வெளியீடுகள், சாதனைகள் அந்நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டும் இருந்தது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
http://noolahamfoundation.org/wiki/index.php…
452px-2015.07.04-01

452px-2015.07.04-04

452px-2015.07.04-06

452px-2015.07.04-07