தென்றல் இதழ்களை அணுக்கப்படுத்துக்கான அனுமதி அளிக்கப்பட்டது

Published on Author Noolaham Foundation

“தென்றல்” இதழின் ஆசிரியர் திரு.க. கிருபாகரன் தென்றல் இதழ்களை நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில் எண்ணிம ஆவணப்படுத்தி அனைவருக்கும் திறந்த அணுக்கத்தில் பகிர்வதற்கான உத்தியோகபூர்வ அனுமதியினை 29/06/2015அன்று மட்டக்களப்பில் தனது இல்லத்தில் வைத்து நிறுவனத்தின் தொடர்பாடல் மற்றும் சமூகத்தொடர்பு அலுவலகரிடம் கையளித்தார்.

http://tinyurl.com/ofpxzh6

மேலும் தொடர்ச்சியாக காலாண்டுக்கு ஒருமுறை வெளிவருகின்ற தென்றல் இதழ்களை, நூலக நிறுவனத்துக்கு அனுப்புவதற்கும் உடன்பாடு தெருவித்திருந்தார். நூலக வலைத்தளத்தில் தென்றல் இதழ்களை இனிவரும் காலங்களில் தொடர்ச்சியாக உலகம் முழுவதுமுள்ள வாசகர்கள் அணுகிப் பயன்பெறமுடியும்.

இதுபோல பலரும் தமது ஆவணங்களினை நூலக வலைத்தளத்தில் பகிர்வதற்கு நூலக நிறுவனத்துடன் இணையவும். (தொடர்புகளுக்கு- +94 112 363 261, +94 212 231 292)

Thendr

Then

Thend