மட்டக்களப்பின் முதல் தினசரி | காலக்கண்ணாடி 03

Published on Author தண்பொழிலன்

கிழக்கைத் தளமாகக் கொண்டு வெளியான பத்திரிகைகளில் சில பத்திரிகைகளே தொடர்ச்சியாக வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்துள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்கது தினக்கதிர். 1990களின் நடுப்பகுதியில் மட்டக்களப்பில் ஆரம்பிக்கப்பட்ட தினக்கதிர், பல்சுவைத் தகவல்களைத் தாங்கிய தினசரிப் பத்திரிகையாக வெளிவந்துகொண்டிருந்தது. அதன் சில இதழ்கள் இருவார இதழ்களாக வெளியாயின. அவற்றில்  1998 ஜூன் 14- 20  திகதியிட்ட “தினக்கதிர்” பத்திரிகை ஒன்றேயே நாம் இன்று பார்க்கவுள்ளோம். இவ்விதழின் தலைப்புச் செய்தியாக “திட்டமிட்டபடி யூலை மாதம் சார்க் மாநாடு. சார்க் தலைவர்கள் இனப்பிரச்சினைத் தீர்வினை… Continue reading மட்டக்களப்பின் முதல் தினசரி | காலக்கண்ணாடி 03

யாழ்ப்பாணத் தமிழ் நாடக அரங்கு – கந்தையா ஸ்ரீகணேசன்

Published on Author தண்பொழிலன்

இலங்கை தொன்றுதொட்டே பல நிகழ்த்துகலைகளுக்கு நிலைக்களனாகத் திகழ்ந்து வந்திருக்கிறது. அவற்றில் சிங்கள மரபு சார்ந்த அரங்காற்றுகைகளும் கலைகளும் பெருமளவு ஆவணப்படுத்தப்பட்டு பரவலான அங்கீகாரத்தைப் பெற்று இன்றும் அரங்கேற்றப்படுகின்றன.ஆனால் ஈழத்தமிழ் சார்ந்த நிகழ்த்துகலைகளுக்கு , போதிய சமூக அங்கீகாரமோ, பரவலாக்கமோ அவை காணவில்லை. அதிலும் சில நிகழ்த்துகலைகள் குறிப்பிட்ட பிரதேசத்துக்கும் குறிப்பிட்ட சமூக அந்தஸ்து கொண்டோருக்கும் வரையறுக்கப்பட்டனவாக உள்ளன. காலவோட்டத்தில் மிக வேகமாக அருகிவரும் இவை, இன்னும் முறைப்படி ஆவணப்படுத்தப்படவோ அங்கீகரிக்கப்படவோ இல்லை எனலாம். அந்த வகையில், அரங்கியல்… Continue reading யாழ்ப்பாணத் தமிழ் நாடக அரங்கு – கந்தையா ஸ்ரீகணேசன்

நூலகத்தின் தொழிற்கலை ஆவணப்படுத்தல் திட்டம் – தும்புக்கைத்தொழில்

Published on Author தண்பொழிலன்

நூலக நிறுவனமும் தமிழ் விக்கிப்பீடியாவும் இணைந்து, இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தின் தொழிற்கலைகளை ஆவணப்படுத்தும் திட்டத்தை தற்போது நடைமுறைப்படுத்தி வருகின்றது. அருகிவரும் தொழிற்கலைகளை பல்லூடகங்களைப் பயன்படுத்தி ஆவணப்படுத்துவது இத்திட்டத்தின் நோக்கமாகும். புகைப்படங்கள், காணொளிகள், வாய்மொழி வரலாறுகள் என்பன பெறப்பட்டு, அவை நூலகத்தின் ஆவணகம் வலைத்தளத்தில் தனிச்சேகரங்கள் திறக்கப்பட்டு அங்கு சேகரிக்கப்படுகின்றன.   இதுவரை ஏழுக்கும் மேற்பட்ட தொழிற்கலைகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் தும்புக்கைத்தொழிலானது, கிழக்கிலங்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரையம்பதி கிராமத்தை மையமாகக் கொண்டு ஆவணப்படுத்தப்பட்டது. தென்னம்மட்டையை பெற்றுக்கொள்ளல்,… Continue reading நூலகத்தின் தொழிற்கலை ஆவணப்படுத்தல் திட்டம் – தும்புக்கைத்தொழில்

இலங்கையின் தமிழ் இலக்கியப் பாரம்பரியத்தைக் காக்கும் எண்ணிம நூலகம் – ரோர்

Published on Author தண்பொழிலன்

“இனமுறுகல் வெடித்த 1981இல் யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட சம்பவம், நாட்டின் அறிவுசார் வளங்கள் இல்லாமல் போன மிக மோசமான இழப்பாக இன்றும் நினைவுகூரப்படுகின்றது. இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்கள் அனுபவித்த கொடூரங்களில் ஒன்றாக இந்நிகழ்வு சித்தரிக்கப்படுகிறது. உண்மை என்னவென்றால், 97,000 புத்தகங்களோடு எரிந்தழிந்து போன யாழ் நூலகம், இலங்கையின் ஆவணப்படுத்தல் பாரம்பரியத்தின் மிகப்பெரிய அங்கமொன்றை இலங்கை இழந்த மாபெரும் இழப்பு அது. அப்படியொரு அனர்த்தம் மீள நிகழக்கூடாது என்பதே 2005 இல் எண்ணிம நூலகம் உருவானதன் முக்கியமான… Continue reading இலங்கையின் தமிழ் இலக்கியப் பாரம்பரியத்தைக் காக்கும் எண்ணிம நூலகம் – ரோர்

இரண்டாம் உலகப்போருக்கு முன் இலங்கையில் ஒருநாள் – காலக்கண்ணாடி 02

Published on Author தண்பொழிலன்

  உலகின் வல்லரசுகள் பல ஒன்றோடொன்று மோதிக்கொண்டிருந்த இரண்டாம் உலகப்போர் 1939 முதல் 1945 வரை இடம்பெற்றது உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கும். அதற்கும் முன் இலங்கையில் வெளியான ஒரு பத்திரிகையின் செய்தியொன்றை இவ்வாரம் நாம் பார்க்கலாம்.   இந்தப் பத்திரிகை வெளியான ஆண்டு 1935. வெளியிட்ட பத்திரிகையின் பெயர், ஈழகேசரி ஈழகேசரி, 1930களிலிருந்து சுமார் இருபத்தைந்து ஆண்டுகளாக யாழ்ப்பாணத்திலிருந்து வெளியான ஒரு பத்திரிகை. அதை நிறுவியவர் குறிப்பிடத்தக்க ஈழத்து ஆளுமைகளுள் ஒருவரான நா.பொன்னையா அவர்கள்.அதன் 1935.07.21 திகதியிட்ட பத்திரிகையில் “இலங்கையில் யுத்தவீரர்… Continue reading இரண்டாம் உலகப்போருக்கு முன் இலங்கையில் ஒருநாள் – காலக்கண்ணாடி 02

மனவெளி கலையாற்றுக் குழுவின் “ஒரு பொம்மையின் வீடு”

Published on Author தண்பொழிலன்

  கனடாவின் முன்னணித் தமிழ் அரங்காற்றுகைக் குழுமங்களில் ஒன்றான “மனவெளி கலையாற்றுக் குழு” ஆனது, எதிர்வரும் யூன் 30 அன்று “ஒரு பொம்மையின் வீடு” நாடகத்தை மேடையேற்ற உள்ளது. “ஒரு பொம்மையின் வீடு” (A Doll’s House) எனும் நாடகம், பத்தொன்பதாம் நூற்றாண்டின் தலைசிறந்த நாடகக் கலைஞர்களில் ஒருவரும், நவீனத்துவ முன்னோடிகளில் ஒருவருமான ஹென்ரிக் இப்சனின்  படைப்பாகும். அந்நாடகம் அரங்கேறிய 1879இலிருந்து தொடர்ச்சியான விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் சந்தித்த நாடகம் அது. நோரா எனும் பாத்திரப் படைப்பின் மூலம்,… Continue reading மனவெளி கலையாற்றுக் குழுவின் “ஒரு பொம்மையின் வீடு”

தமிழ் ஓலைச் சுவடிகளை வாசித்தல்

அண்ணாமலைக் கனடா’ மற்றும் ‘நூலகம் நிறுவனம்’ என்பன இணைந்து கடந்த சனிக்கிழமையன்று (16 ஜூன் 2018) நடத்திய பழந்தமிழ் ஓலைச்சுவடிகளை வாசிப்பதற்கான பயிற்சிப்பட்டறையானது மிகவும் பயனுள்ளதாகவும் வெற்றிகரமானதாகவும் அமைந்திருந்தது. பயிற்றுனர்: முனைவர் பால சிவகடாட்சம் அவர்களால், பயிற்சிக்கு வந்திருந்த ஆர்வலர்களுக்கு, பல்வேறு நிலைகளில் (நல்ல நிலையில் உள்ளவை, கறையான் அரித்தவை, தெளிவானவை, தெளிவற்றவை) கிடைக்கப்பெற்ற ஓலைச்சுவடிகள் பார்வையிடுவதற்காக வழங்கப்பட்டன. ஓலைச்சுவடிகளைத் தூய்மைப்படுத்தும் வழிவகைகள் மற்றும் அவற்றைப் பாதுகாக்கும் முறைகள் பற்றிய விளக்கங்களின் பின்னர் ஓலைச்சுவடிகளை வாசிக்கும் வழிமுறைகளும்… Continue reading தமிழ் ஓலைச் சுவடிகளை வாசித்தல்