“யாழ்ப்பாண இராச்சியம்” – பேராசிரியர்.சி.க.சிற்றம்பலம்

Published on Author தண்பொழிலன்

“யாழ்ப்பாண இராச்சியம்” எனும் நூலானது, இலங்கைத் தமிழரின் வரலாற்றைப் பொறுத்தவரை, மிக முக்கியமானதாகும். பேராசிரியர்.சி.க.சிற்றம்பலம் அவர்களின் தொகுப்பில், 1992 இல் யாழ்.பல்கலைக்கழக வெளியீடாக வெளிவந்த இந்நூல், வட இலங்கையில் நிலவிய தமிழரசு பற்றிய அதிகபட்ச சான்றாதாரங்களுடன் எழுதப்பட்ட அருமையான நூல் ஆகும். இந்நூலானது, அதிகபட்ச வரலாற்றுணர்வோடு இலங்கையில் எழுதப்பட்ட தமிழ்நூல்களில் ஒன்று எனலாம். யாழ் தீபகற்பத்தின் வரலாற்றைப் பாடுகின்ற, கைலாயமாலை, வையாபாடல், யாழ்ப்பாண வைபவ மாலை ஆகிய தொன்மங்களை அப்படியே எடுத்தாளாமல், அவற்றில் “கதை” எனத் தள்ளத்தக்கவற்றைத்… Continue reading “யாழ்ப்பாண இராச்சியம்” – பேராசிரியர்.சி.க.சிற்றம்பலம்

ஐந்து புத்தக சவால் – இலங்கை வரலாறு!

Published on Author தண்பொழிலன்

முகநூலில் அண்மையில் பிரபலமாக இருந்த ஐந்து புத்தகங்கள் சவால் (Five books challenge) பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். பொதுவாக இந்த சவாலில் தங்களுக்குப் பிடித்த ஐந்து புத்தகங்களின் அட்டைகளைப் பதிவிட்டு, இன்னும் ஐந்து பேரை இணைத்துக்கொள்வார்கள். அவ்வாறு இணைக்கப்பட்ட ஒவ்வொருவரும் தங்களுக்குப் பிடித்த ஐந்து புத்தகங்களின் அட்டைகளைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். பிரபலமான அல்லது பலருக்கும் பிடித்தமான புத்தகங்களின் அட்டைகளே இந்த சவாலில் பெரும்பாலும் பகிர்ந்துகொள்ளப்பட்டன. எனினும், முகநூல் பதிவர்கள், பத்தோடு பதினொன்றாகக் கருதி அந்தப் பதிவுக்கு விருப்பம்… Continue reading ஐந்து புத்தக சவால் – இலங்கை வரலாறு!

புத்தகங்களுக்கு ஒரு நாள்!

Published on Author தண்பொழிலன்

இந்த ஆண்டிற்கான உலக புத்தக தினமானது ஏப்ரல் 23, 2018 திங்கட்கிழமையன்று உலகம் முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. கடந்த 1995இலிருந்து யுனெஸ்கோ அமைப்பின் அனுசரணையில் ஆண்டுதோறும் ஏப்ரல் 23ஆம் திகதி கொண்டாடப்பட்டுவரும் இத்தினமானது புத்தகம், அதன் பதிப்புரிமை மற்றும்  வாசிப்பைப் பழக்கத்தை அதிகரித்தல் முதலியவற்றை நோக்கமாகக் கொண்டதாகும். எனவே, சில இடங்களில் இது “புத்தக பதிப்புரிமை தினம்” என்றும் அழைக்கப்படுகிறது. 1920களிலேயே ஸ்பெயினில் உலக புத்தக தினம் பற்றிய கருதுகோள் தோன்றிவிட்டது என்றாலும், 1995ஆம் ஆண்டிலேயே யுனெஸ்கோ… Continue reading புத்தகங்களுக்கு ஒரு நாள்!

Toronto – Jaffna Partnership – Library Initiative Launch

Toronto mayor John Tory and Northern province chief minister Justice C. V. Vigneswaran signed a Memorandum of Understanding last year. Economic development, education, governance and library services were selected as key areas for cooperation. The focus of library services as one of the four core areas demonstrate the critical role libraries can play in reconstruction… Continue reading Toronto – Jaffna Partnership – Library Initiative Launch

மட்டக்களப்பில் நூலகம் – விக்கிப்பீடியா பயிற்சிப்பட்டறை

Published on Author தண்பொழிலன்

2018 மார்ச் 31ஆம் திகதி சனிக்கிழமையன்று, நூலகம் நிறுவனமும் விக்கிப்பீடியாவும் இணைந்து நடத்திய பயிற்சிப் பட்டறையானது, மட்டக்களப்பு ஆரையம்பதி உயர் தொழிநுட்ப நிறுவனத்தின் கணினிக்கூடத்தில் இடம்பெற்றது. திரு.சஞ்சீவி சிவகுமார், திரு.பிரசாத் சொக்கலிங்கம், திரு.வி.துலாஞ்சனன் ஆகியோர் ஒருங்கிணைப்பாளர்களாகப் பங்காற்றிய இப்பட்டறையில், யாழ்ப்பாணத்திலிருந்து வந்திருந்த திரு.மயூரநாதன் கலந்துகொண்டு, பெறுமதியான பல கருத்துக்களை முன்வைத்தார். உயர் தொழிநுட்ப நிறுவனத்தின் இயக்குநர் திரு. செல்வரத்தினம் ஜெயபாலன் அவர்களும் நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தார். விக்கிப்பீடியாவை அறிமுகப்படுத்தல், நூலகம் நிறுவனத்தால் தற்போது மேற்கொள்ளப்படும் வடக்கு – கிழக்கு … Continue reading மட்டக்களப்பில் நூலகம் – விக்கிப்பீடியா பயிற்சிப்பட்டறை

இழந்தவை ஏராளம்; இருப்பவற்றையாவது பாதுகாக்க வேண்டும்

Published on Author தண்பொழிலன்

“தந்தை செல்வா பற்றிய நூல்களைச் சேகரித்துக் கொண்டிருந்தபோது, எதேச்சையாக நூலகமொன்றில், அவர் காலத்து விவரங்கள்  விரிவாகப் பதிவாகியுள்ள சுதந்திரன், ஈழநாடு ஆகிய நாளிதழ்களைக் கண்டெடுத்தோம். இப்போது நாம் செய்கின்ற ஆவணப்படுத்தல் முக்கியமானது தான் என்றாலும், கடந்த ஐம்பது, அறுபது ஆண்டுகளாக இந்த ஆவணப்படுத்தலை விடாமல் செய்துவந்தோரின் முயற்சியில் தான் மேற்படி இதழ்கள் எமக்குக் கிடைத்தன என்பதைக் குறிப்பிடவிரும்புகிறேன்” என்று தெரிவித்தார் திரு.கோபிநாத். அவுஸ்திரேலியாவின் ஏரிபிசி (ATBC) வானொலிக்கு அவர் நூலகம் நிறுவனம் தொடர்பாக வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு… Continue reading இழந்தவை ஏராளம்; இருப்பவற்றையாவது பாதுகாக்க வேண்டும்

நூலக நிறுவன வளங்கள் உயர் ஆய்வுக்கு பயன்படுத்த வல்லவை!

Published on Author தண்பொழிலன்

நூலகம் அருமையான, அரிய படைப்புக்களை பாதுகாத்து அணுக்கம் வழங்குகின்றது. இன்னும் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளில், நூலக நிறுவனத்தின் வலைத்தளங்களிலுள்ள நூல்களையும் இதர சேகரங்களையும் மட்டுமே அணுகித் தம் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதனூடாக பலரும் தம் முனைவர்ப் பட்டங்களைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும். திரு.அருண்மொழிவர்மன் மற்றும்  திரு.சுகந்தன் ஆகியோர் கனடாவின் சி.எம்.ஆர். வானொலிக்கு, கடந்த பெப்ரவரி மாதம் 24ஆம் திகதி வழங்கிய செவ்வியில் மேற்படி தெரிவித்தனர். நூலகம் நிறுவனம், அது உருவான பின்னணி, அதன் துணைத்திட்ட வலைத்தளங்களான நூலகம் , ஆவணகம்,… Continue reading நூலக நிறுவன வளங்கள் உயர் ஆய்வுக்கு பயன்படுத்த வல்லவை!