அதிபர்கள் சந்திப்பும் பாடசாலை ஆவணமாக்கலும்

Published on Author தண்பொழிலன்

நூலக நிறுவனமானது வடமாகாணத்திலுள்ள பாடசாலைகளின் வெளியீடுகளை ஆவணப்படுத்தும் நோக்கில் பாடசாலைகளிலிருந்து மேற்கொள்ளப்பட்ட வெளியீடுகள் ,மாகாண, வலய மட்ட பரீட்சை வினாத்தாள்கள் மற்றும் பரிகார கற்றல் கையேடுகள் உட்பட மாணவர் கற்றல் கற்பித்தல் சார் விடயங்கள் போன்றவற்றை சேகரித்து எண்ணிமப்படுத்தி இணையத்தில் பதிவேற்றம் செய்வதற்கான எழுத்து மூல அனுமதியை வடமாகாண கல்வித்திணைக்களத்திடமிருந்து பெற்றுள்ளது. இதற்கு தேவையான உதவிகளை வழங்குமாறு சுற்றறிக்கை மூலம் வட மாகாண கல்விப்பணிப்பாளர் செ.உதயகுமார் வலயப்பாடசாலை அதிபர்களை கேட்டுள்ளார்.   இதன் முதற்கட்டமாக , துணுக்காய்… Continue reading அதிபர்கள் சந்திப்பும் பாடசாலை ஆவணமாக்கலும்

நூலகத்தின் ஊர் ஆவணப்படுத்தல் திட்டம்

Published on Author தண்பொழிலன்

வரலாறு என்றால், நாமெல்லாம் சேரநாடு, சோழநாடு, பாண்டியநாடு, என்று பட்டியல் வாசிப்போம். இதே கேள்வியை தொன்மையான வரலாற்றுக் குடியிருப்புகள் என்றால், மதுரை, தஞ்சை, காஞ்சி என்றோ, கீழடி, ஆதிச்சநல்லூர் என்றோ மீண்டும் தமிழகத்திலேயே போய் நிற்போம்.   கொஞ்சம் விடயம் தெரிந்தவர் என்றால் யாழ்ப்பாண இராச்சியம், வன்னிச் சிற்றரசுகள், மட்டக்களப்பு வன்னிமைகள் திருக்கோணமலை, கந்தரோடை, பொம்பரிப்பு, என்று இங்குள்ள பட்டியலையும் சேர்த்துக்கொள்ளுவோம். . இதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். நீங்கள் பிறந்த ஊரின் வரலாறு உங்களுக்குத் தெரியுமா? தமிழரின் வரலாற்றுக் குடியிருப்புகளில் உங்கள் ஊரின் பெயரையும்… Continue reading நூலகத்தின் ஊர் ஆவணப்படுத்தல் திட்டம்

யாழில் சுவடி ஆவணப்படுத்தல் கண்காட்சி

Published on Author தண்பொழிலன்

வட இலங்கையின் சுவடிச்சேகரங்களை எண்ணிமப்படுத்தும் செயற்றிட்டமானது, இங்கிலாந்தின் ஆபத்துக்குள்ளான சுவடிக்காப்பகத் திட்டத்தின் அனுசரணையில் இடம்பெற்றுவருகின்றது. இதன் ஒரு பாகமாக, சுவடிகளை ஆவணப்படுத்துவது எவ்வாறு என்பதை விவரிக்கும் கண்காட்சி ஒன்று நூலக நிறுவனத்தால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் அக்டோபர் 12 (வெள்ளி) முதல் 14 (ஞாயிறு) வரை இது கொக்குவில் ஆடிய பாதம் வீதியிலுள்ள நூலக நிறுவனத்தில் இடம்பெறும்.     ஆய்வு, ஆவணப்படுத்தல், மரபுரிமை தொடர்பான ஆர்வமுள்ள அனைவரதும் வருகையினை நூலக நிறுவனம் எதிர்பார்க்கிறது

அக்கினி உண்ட அரும்பொருட்கள்! | பிரேசிலின் துயரம்

Published on Author தண்பொழிலன்

தமிழர் வாழ்வில் மறக்கமுடியாத நாள் 1981 யூன் 1. அன்று நள்ளிரவிலேயே தமிழரின் கல்விச்சொத்தான யாழ்ப்பாண நூலகம், திட்டமிட்டு எரித்துச் சாம்பலாக்கப்பட்டது. அதன் விளைவையொத்த எதிர்பாராத இன்னொரு சம்பவத்தை இந்த இருபத்தோராம் நூற்றாண்டில் சந்தித்திருக்கிறது பிரேசில். அந்நாட்டின் தலைநகர் ரியோடி ஜெனிரோவில் அமைந்திருந்த தேசிய  அருங்காட்சியகம், கடந்த 2018 செப்டம்பர் இரண்டாம் திகதி நள்ளிரவில் ஏற்பட்ட தீவிபத்தில் எரிந்தொழிந்து போயிருக்கிறது.   ரியோ டி ஜெனிரோவின் அருங்காட்சியகம், அங்கிருந்த மிகப்பழைய கட்டிடங்களுள் ஒன்று. கடந்த 1892இல் அருங்காட்சியகமாக… Continue reading அக்கினி உண்ட அரும்பொருட்கள்! | பிரேசிலின் துயரம்

மூடப்பட்ட இணைய உள்ளடக்கத்தை ஆவணப்படுத்தல், பகுப்பாய்தல், காட்சிப்படுத்தல், தேடல்

Published on Author தண்பொழிலன்

ஒவ்வொரு கணப்பொழுதிலும் இணையத்தில் பெரும் எண்ணிக்கையிலான தகவல்கள் பதிவுசெய்யப்பட்டுக்கொண்டு இருக்கின்றன. வலைத்தளங்கள், வலைப்பதிவுகள், மன்றங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் என்பனவற்றில் அறிவியல், பண்பாட்டு, அரசியல் உட்பட்ட பல துறைகளைச் சார்ந்த முக்கிய தகவல்கள் இருக்கின்றன. தமிழ்ச் சூழலைப் பொறுத்தவரை, 1992 இல் ஆரம்பமான soc.culture.tamil usernet குழுமம் தொடங்கி, ஜியோசிட்டிஸ் (geocities), மன்றங்கள், வலைத்தளங்கள், வலைப்பதிவுகள் (blogs), அண்மைய டுவிட்டர் கீச்சுக்கள் (tweets) வரை விரிவான உள்ளடக்கம் உண்டு. ஏதேனும் ஒரு ஆய்வுப்பரப்பில், ஒரு தலைப்பை ஆய்வு… Continue reading மூடப்பட்ட இணைய உள்ளடக்கத்தை ஆவணப்படுத்தல், பகுப்பாய்தல், காட்சிப்படுத்தல், தேடல்

நூலகத்தின் தொழிற்கலை ஆவணப்படுத்தல் திட்டம் – தும்புக்கைத்தொழில்

Published on Author தண்பொழிலன்

நூலக நிறுவனமும் தமிழ் விக்கிப்பீடியாவும் இணைந்து, இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தின் தொழிற்கலைகளை ஆவணப்படுத்தும் திட்டத்தை தற்போது நடைமுறைப்படுத்தி வருகின்றது. அருகிவரும் தொழிற்கலைகளை பல்லூடகங்களைப் பயன்படுத்தி ஆவணப்படுத்துவது இத்திட்டத்தின் நோக்கமாகும். புகைப்படங்கள், காணொளிகள், வாய்மொழி வரலாறுகள் என்பன பெறப்பட்டு, அவை நூலகத்தின் ஆவணகம் வலைத்தளத்தில் தனிச்சேகரங்கள் திறக்கப்பட்டு அங்கு சேகரிக்கப்படுகின்றன.   இதுவரை ஏழுக்கும் மேற்பட்ட தொழிற்கலைகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் தும்புக்கைத்தொழிலானது, கிழக்கிலங்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரையம்பதி கிராமத்தை மையமாகக் கொண்டு ஆவணப்படுத்தப்பட்டது. தென்னம்மட்டையை பெற்றுக்கொள்ளல்,… Continue reading நூலகத்தின் தொழிற்கலை ஆவணப்படுத்தல் திட்டம் – தும்புக்கைத்தொழில்

இலங்கையின் தமிழ் இலக்கியப் பாரம்பரியத்தைக் காக்கும் எண்ணிம நூலகம் – ரோர்

Published on Author தண்பொழிலன்

“இனமுறுகல் வெடித்த 1981இல் யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட சம்பவம், நாட்டின் அறிவுசார் வளங்கள் இல்லாமல் போன மிக மோசமான இழப்பாக இன்றும் நினைவுகூரப்படுகின்றது. இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்கள் அனுபவித்த கொடூரங்களில் ஒன்றாக இந்நிகழ்வு சித்தரிக்கப்படுகிறது. உண்மை என்னவென்றால், 97,000 புத்தகங்களோடு எரிந்தழிந்து போன யாழ் நூலகம், இலங்கையின் ஆவணப்படுத்தல் பாரம்பரியத்தின் மிகப்பெரிய அங்கமொன்றை இலங்கை இழந்த மாபெரும் இழப்பு அது. அப்படியொரு அனர்த்தம் மீள நிகழக்கூடாது என்பதே 2005 இல் எண்ணிம நூலகம் உருவானதன் முக்கியமான… Continue reading இலங்கையின் தமிழ் இலக்கியப் பாரம்பரியத்தைக் காக்கும் எண்ணிம நூலகம் – ரோர்