நூலகத்தில் கெளரிபாலனின் நூல்கள்

Published on Author Noolaham Foundation

மட்டக்களப்பு குருக்கள்மடத்தினைச் சேர்ந்த சிறுகதை, நாடகம் மற்றும் சிறுவர் இலக்கிய எழுத்தாளர், சமூக ஆய்வாளர் வி.கெளரிபாலன் அவர்கள், தமது நூல்களை நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில் ஆவணப்படுத்துவதற்கான அனுமதியினையும், தனது நூல்களையும் நூலக நிறுவனத்திடம் கையளித்துள்ளார். இவரது நூல்களான 1) பறப்பிழந்த வண்ணத்துப் பூச்சிகள், 2) வானுறையும் தெய்வத்தினுள் முதலிய நூல்கள் ஏற்கனவே நூலக நிறுவனத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இணைப்பில் கெளரிபாலனது நூல்கள்- http://tinyurl.com/Gowripalan {{உலகலாவிய ரீதியில் இலங்கைத்தமிழ் பேசும் சமூகம் தொடர்பான ஆவணப்படுத்தலுக்கும் அவற்றை திறந்த அணுக்கத்தில்… Continue reading நூலகத்தில் கெளரிபாலனின் நூல்கள்

கே.ஸ்.சிவகுமாரன் தமது எழுத்துக்களை அணுக்கப்படுத்த அனுமதியினை வழங்கியுள்ளார்

Published on Author Noolaham Foundation

ஈழத்தின் மூத்த பல்துறை எழுத்தாளரும், இலக்கியவாதியும், நூலக நிறுவனத்துடன் இணைந்து இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்களை ஆவணப்படுத்துதல் தொடர்பான செயற்பாடுகளுக்கு பலகாலமாக வலுச்சேர்த்து வருபவருமான “கே.ஸ்.சிவகுமாரன்” அவர்கள் தமது எழுத்துக்களை நூலக நிறுவனத்தில் எண்ணிம ஆவணப்படுத்தி அனைவருக்கும் திறந்த அணுக்கத்தில் பகிர்வதற்கான அனுமதியினை வழங்கியுள்ளார். கே.ஸ். சிவகுமாரன் அவர்களின் எழுத்தில் அமைந்த இலக்கிய திறனாய்வு பற்றிய நூல்கள், சிறுகதைகள், சினிமா பற்றிய நூல்கள் போன்ற இன்னோரன்ன பலநூல்களும் நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில் தொடர்ச்சியாக ஆவணப்படுத்தப்படுகின்றன. {{உலகலாவிய… Continue reading கே.ஸ்.சிவகுமாரன் தமது எழுத்துக்களை அணுக்கப்படுத்த அனுமதியினை வழங்கியுள்ளார்