மட்டக்களப்பின் முதல் தினசரி | காலக்கண்ணாடி 03

Published on Author தண்பொழிலன்

கிழக்கைத் தளமாகக் கொண்டு வெளியான பத்திரிகைகளில் சில பத்திரிகைகளே தொடர்ச்சியாக வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்துள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்கது தினக்கதிர். 1990களின் நடுப்பகுதியில் மட்டக்களப்பில் ஆரம்பிக்கப்பட்ட தினக்கதிர், பல்சுவைத் தகவல்களைத் தாங்கிய தினசரிப் பத்திரிகையாக வெளிவந்துகொண்டிருந்தது. அதன் சில இதழ்கள் இருவார இதழ்களாக வெளியாயின. அவற்றில்  1998 ஜூன் 14- 20  திகதியிட்ட “தினக்கதிர்” பத்திரிகை ஒன்றேயே நாம் இன்று பார்க்கவுள்ளோம். இவ்விதழின் தலைப்புச் செய்தியாக “திட்டமிட்டபடி யூலை மாதம் சார்க் மாநாடு. சார்க் தலைவர்கள் இனப்பிரச்சினைத் தீர்வினை… Continue reading மட்டக்களப்பின் முதல் தினசரி | காலக்கண்ணாடி 03

மட்டக்களப்பில் நூலகம் – விக்கிப்பீடியா பயிற்சிப்பட்டறை

Published on Author தண்பொழிலன்

2018 மார்ச் 31ஆம் திகதி சனிக்கிழமையன்று, நூலகம் நிறுவனமும் விக்கிப்பீடியாவும் இணைந்து நடத்திய பயிற்சிப் பட்டறையானது, மட்டக்களப்பு ஆரையம்பதி உயர் தொழிநுட்ப நிறுவனத்தின் கணினிக்கூடத்தில் இடம்பெற்றது. திரு.சஞ்சீவி சிவகுமார், திரு.பிரசாத் சொக்கலிங்கம், திரு.வி.துலாஞ்சனன் ஆகியோர் ஒருங்கிணைப்பாளர்களாகப் பங்காற்றிய இப்பட்டறையில், யாழ்ப்பாணத்திலிருந்து வந்திருந்த திரு.மயூரநாதன் கலந்துகொண்டு, பெறுமதியான பல கருத்துக்களை முன்வைத்தார். உயர் தொழிநுட்ப நிறுவனத்தின் இயக்குநர் திரு. செல்வரத்தினம் ஜெயபாலன் அவர்களும் நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தார். விக்கிப்பீடியாவை அறிமுகப்படுத்தல், நூலகம் நிறுவனத்தால் தற்போது மேற்கொள்ளப்படும் வடக்கு – கிழக்கு … Continue reading மட்டக்களப்பில் நூலகம் – விக்கிப்பீடியா பயிற்சிப்பட்டறை

நூலகத்தில் மொழிதல் ஆய்விதழ்

Published on Author Noolaham Foundation

மட்டக்களப்பில் இருந்து ஓர் ஆய்விதழாக வெளிவரும் ‘மொழிதல்’ இதழ்களினை இப்போது நூலகம் நிறுவன எண்ணிம நூலகத்தில் பார்வையிடமுடியும். இவ் ஆய்விதழ் அரையாண்டிதழாக 2014ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் வெளிவர ஆரம்பித்தது. கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர்களான சி.சந்திரசேகரம், வ.இன்பமோகன், சு.சிவரத்தினம் முதலியோர் இவ் இதழ்களினது ஆசிரியர்களாக உள்ளனர். மேலும் பல முன்னாள் பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்களும் இவ் இதழின் ஆலோசகர்வட்டத்தில் பங்கெடுக்கின்றனர். பல்வேறு புலமையாளர்களின் கட்டுரைகளை உள்ளடக்கங்களாகக் கொண்டு இவ் ஆய்விதழ் வெளியாகின்றது. இதனை நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில்… Continue reading நூலகத்தில் மொழிதல் ஆய்விதழ்

நூலகத்தில் கெளரீஸ்வரனின் வெளியீடுகள்

Published on Author Noolaham Foundation

மட்டக்களப்பின் இளம் சமூக செயற்பாட்டாளரும், சமூக அரங்கான கூத்தரங்கின் ஆய்வாளரும், மூன்றாவது கண் உள்ளூர் அறிவுத்திறன் செயற்பாட்டுக்குழுவின் மூத்த உறுப்பினரும், எழுத்தாளருமான ஆசிரியர் திரு. துரை. கெளரீஸ்வரன் அவர்களுடைய எழுத்துக்களை தற்போது நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில் அணுகி வாசிக்கலாம். இதற்கான அனுமதியினை ஆசிரியர் திரு.துரை.கெளரீஸ்வரன் அவர்கள் நூலக நிறுவனத்திடம் கையளித்தார். இணைப்பில் நூல்கள்- http://tinyurl.com/och87xy {{உலகளாவிய ரீதியில் இலங்கைத்தமிழ் பேசும் சமூகம் தொடர்பான ஆவணப்படுத்தலுக்கும் அவற்றை திறந்த அணுக்கத்தில் அனைவருக்கும் பகிர்வதற்கும் உங்களது உறவினர்களுடைய நினைவுமலர்களையும்… Continue reading நூலகத்தில் கெளரீஸ்வரனின் வெளியீடுகள்

நூலகத்தில் மட்டக்களப்பு இசைநாடகப் பள்ளியின் வெளியீடுகள்

Published on Author Noolaham Foundation

இசைநாடகப்பள்ளி; மட்டக்களப்பின் குருக்கள் மடத்தில் இருந்து கீதா கெளரிபாலன் என்பவரால் கடந்த இருஆண்டுகளுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டு இசை மற்றும் நாடகம் முதலியவற்றினை தொடர்ச்சியாக பேணும் நோக்குடனும் புதியதோர் தலைமுறையினை இதன்பால் வளர்த்தெடுக்கும் நோக்குடனும் தொடர்ந்து இயங்கிவருகின்றது. இவ் இசைநாடகப் பள்ளியின் வெளியீடாக ‘வியளம்’ எனும் சஞ்சிகை சிறுவர்கள், இளையோர்கள் போன்றோரின் ஆற்றலுக்கு களமமைக்கும் விதமாக அண்மைக்காலமாக வெளியிடப்படுகின்றது. இச் சஞ்சிகைகள் நூலக நிறுவனத்தில் தொடர்ச்சியாக ஆவணப்படுத்தப்படுகின்றன. இவற்றின் பிரதிகள் மற்றும் அனுமதிகள் போன்றவற்றினை ‘இசைநாடகப் பள்ளியின்’ நிறுவனரும்,… Continue reading நூலகத்தில் மட்டக்களப்பு இசைநாடகப் பள்ளியின் வெளியீடுகள்

நூலகத்தில் ஏட்டண்ணாவியார் செல்லையா சிவநாயகம் படைப்புகள்

Published on Author Noolaham Foundation

மட்டக்களப்பு, சீலாமுனையைச் சேர்ந்த ஏட்டண்ணாவியார் செல்லையா சிவநாயகம் தனது எழுத்தில் அமைந்த நூல்களை நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில் ஆவணப்படுத்திப் பகிர்வதற்கான அனுமதியினை அளித்துள்ளார். செ.சிவநாயகம் பல மீளுருவாக்கக் கூத்துக்களை எழுதியுள்ளதுடன் தொடர்ச்சியாக கூத்துச்செயற்பாடுகளிலும் ஈடுபட்டுவருபவர். கூத்து மீளுருவாக்கம் தொடர்பில் ஆரம்பத்திலிருந்து அக்கிராமத்துடன் ஒன்றிணைந்து செயற்பட்டு வருகின்றார். இணைப்பில் நூல்கள்- http://tinyurl.com/Sivanayagam {{உலகளாவிய ரீதியில் இலங்கைத்தமிழ் பேசும் சமூகம் தொடர்பான ஆவணப்படுத்தலுக்கும் அவற்றை திறந்த அணுக்கத்தில் அனைவருக்கும் பகிர்வதற்கும் உங்களது ஆவணங்களை நூலகத்துடன் பகிர்ந்துகொள்வதற்கு தொடர்பு கொள்ளுங்கள்-… Continue reading நூலகத்தில் ஏட்டண்ணாவியார் செல்லையா சிவநாயகம் படைப்புகள்

மகுடம் வெளியீடுகளை அணுக்கப்படுத்தலுக்கான அனுமதி பெறப்பட்டது

Published on Author Noolaham Foundation

‘மகுடம்’ இதழ் 2012ஆம் ஆண்டின் முற்பகுதியிலிருந்து ஆண்டுக்கு நான்கு இதழ்களாக கிழக்கிலங்கை மட்டக்களப்பிலிருந்து கலை இலக்கிய சமூக பண்பாட்டுக்கான காலாண்டிதழாக தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வருகின்றது. மகுடம் இதழின் ஆசிரியர் திரு வி.மைக்கல் கொலின் அவர்கள் நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில் மகுடம் காலாண்டிதழ்களையும், மகுடம் வெளியீட்டால் வெளியிடப்படும் இதர வெளியீடுகளையும் ஆவணப்படுத்தும் அனுமதியினை அளித்திருந்தார். நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில் ‘இதழ்கள்’ பகுதியினூடாக மகுடம் சஞ்சிகைகளையும் இன்னும் பிற நூல்களையும் உலகலாவிய ரீதியில் தொடர்ச்சியாக அணுகிப் பயன்பெறமுடியும்.… Continue reading மகுடம் வெளியீடுகளை அணுக்கப்படுத்தலுக்கான அனுமதி பெறப்பட்டது